பயணம் செய்கையிலும்
பிள்ளைப் பசி
போக்கத் தவறாளே!
பாதி உறக்கத்திலும்
மக்கள்
ஞாபகம் குறையாளே!
சொந்தப் பிள்ளையென்று
அவளுக்கு
எந்தப் பிள்ளையுண்டு?
அந்தந்த நேரத்திலே
வரும் பிள்ளையை
அணைத்து மகிழ்ந்திடுவாள்!
அடடா,
அவளல்லவா தாய்,
அவளே
"உலக" தாய்.
அவளே தாய்,
அவளை வணங்கு.
அவளுக்கு
நீ மட்டுமா குழந்தை?
அழுது அடம்பிடித்தால்,
கண்ணே உனக்கு
கள்ளிப் பாலுண்டு!