Monday, February 28, 2011


என்
எவெரெஸ்ட்டும் நீதான்
என்
பசிபிக்கும் நீதான்

உன்னைவிடவும்
பெரிய வெற்றி
எனக்கு இல்லை.
உன்னைவிடவும்
பெரிய தோல்வியும்
இல்லை.

என்
எல்லாத்துயரங்களிலும்
சேதமில்லாமல் காப்பாற்றிக்கொள்ள
நான் பாடுபடுவது
உன்னை மட்டுமே

எவ்வளவு
துன்பப் படுத்தினாலும்
எனக்கு
மிகவும் பிடித்திருக்கிறது
உன் நோய்.

என்னோடு
நீ வாழ்ந்த
இந்த ஜென்மத்துக்குக்
கைமாறாக
உன்னோடு நான் வாழும்
இன்னொரு ஜென்மம் தா.

குருதியைப் போல்.


சுவாசம் கூட
உட்புகுந்து
வெளியேறி விடுகிறது;
உயிரைப் போல்...

கண்ணில் புகுந்த நீ
நிரந்தரமாய்
தங்கி விட்டாய்
குருதியைப் போல்.

Sunday, February 27, 2011

என் நட்சத்திரமே



என் நட்சத்திரமே
நீ வேண்டுமென
நான்
இருளாகவே இருந்து விட்டேன்.

எடை


எடை காட்டும் எந்திரங்கள்
பொய் சொல்லும்.
உன்னைக் காதலிப்பவனைக் கேள்
நீ எத்தனைக் கனமானவள் என்று.

உன் புன்னகையின் கனத்தையே
தாங்க முடியாதவன்
உன் கண்ணீரின் கனத்தில் என்னாவேன்?

இவங்க யாரொடும் கூட்டு சேராமல்
கூவிக் கூவிச் சாகவேண்டியதுதான்.
பொழைக்க முடிஞ்சவன்தான்
இன்னொருத்தனைக் காப்பாற்ற முடிஞ்சவன்
வேணும்னா இந்தக் குறள்களப் படிங்க..
பொழைங்க
அப்புறமா எங்கள காப்பாத்த வாங்க...
குறள் 679,875

பண்டிட் வகையைச் சார்ந்த
ஜவகர் லால் நேருவுக்கு
கமலா வுடனான
ஒரே மகள்
இந்திரா.

இந்திரா ஜவகரின் செல்ல
மகன் போன்ற மகள்.

அந்த இந்திரா வெளிநடுகளின் சுற்றில்
பெரோஸ் என்று ஒரு
அயல் நாட்டாரை அழைத்து வந்தார்

அவருடன்
இரண்டு பிள்ளைகைப் பெற்றார்.

மூத்தது ராஜீவ்
இளையது சஞ்சய்


முன்னது விமானி
பின்னது துடுக்கு (யாரும் தறுதலை என்று பொருள் கொள்ளக் கூடாது)

இரண்டும் தொழில்
மாற்றிச் செய்தபோது
இரண்டும் விபத்தாகி சிதறி விட்டன.

இதில்
மூத்தது
(அதுவே வெளிநாட்டு மாற்றுப் பாலின சேர்க்கை வகை)
இத்தாலிப் பெண் ஒன்றை அழைத்து வந்தது.

அது இரண்டு பெற்றது.
ஒரு பெண் ஒரு பிள்ளை.
அதுக்கு இப்ப நம்மை ஆளலாம் என்று ஆசை ஏற்பட்டிருக்கிறது

இது என்ன கூடாத ஆசையா?
நம்மை எவெனெவனோ
ஆண்டுட்டுப் போயிருக்கிறான்.

கழுதை
இதுக்கு ஆசை வரப்படாதா?

வரட்டும் ..வரட்டும்...

அதுக்கும் இங்குள்ள
......பசங்க தோள்குடுத்து தோக்கிட்டு நிக்கிறான் பாருங்க ...
அதுதான் என்னமோ போல இருக்கு...
ஆமா கேடு நமக்கென்ன
ரோசமா மானமா வெக்கமா
சூடா சொரணையா..

விட்டுத் தள்ளுவீங்களா...

Saturday, February 26, 2011

yaaroo


என் அம்மா!

மீண்டும் ஒரு முறை வேண்டும் அம்மா -உன் கருவறை!

என்றும் நான் மழலை அம்மா -நீ வாழும் வரை!

இரவிலும் பகலிலும் என்னகென துடித்தை!

கனவிலும் நான்

அழுதால்

திடுக்கிட்டு

விழித்தாய்!

எந்த தவமும்

நான் – செய்ய வில்லை

உன்னை பெறுவதற்கு !

இனி

எந்த வரமும் தேவை இல்லை – போதும் நீ என்னக்கு!

கடவுள் கொடுத்த

கருணை யாவும் உன் – கண்ணில் ஒளிர்கிறது !

எந்த உலகம்

மறந்த பாசம் நேசம் உன்னுள்

இருக்கிறது !

என்னை பத்து மாதம் உன்னக்குள் வைத்தாய்!

உன் உயிரை பிடித்து

எனக்கு அழைப்பு

விடுத்தாய் !

உன் தியாகம் சொல்ல மொழிகள்

இல்லை !

உன்னை போல ஒரு ஜீவன் இல்லை !

மீண்டும் ஒரு முறை வேண்டும்

அம்மா -உன் கருவறை !

- ஒரு இணையத்தில் இருந்து எடுத்தது

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரும், ஈழத் தமிழர்களால் தங்களின் தேசியத் தலைவராக மதிக்கப்படுபவருமான வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் சடலம் எரிக்கப்பட்ட சிதையில் நாய்களை கொன்று போட்டு எரித்த சிறிலங்க இராணுவத்தின் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கை, சிறிலங்க அரசின், சிங்கள அரசியலின் இனவெறி முகத்தை அம்பலப்படுத்தியுள்ளது.

மறைந்த பார்வதி அம்மாளின் உறவினர்கள், சிதையில் இருக்கும் சாம்பலைக் கொண்டு இறுதிச் சடங்கை செய்ய வந்து பார்த்தபோது, அதில் கொல்லப்பட்ட நாய்களின் எரிந்த சடலங்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்றுள்ளனர். சிறிலங்க இராணுவத்தின் இந்த ஈனச் செயல் ஈழத் தமிழர்கள் மட்டுமின்றி, உலகத் தமிழர்கள் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
FILE


கடந்த ஞாயிற்றுக் கிழமை காலை பார்வதி அம்மாள் இறந்துவிட்ட செய்தி பரவியதும், யாழ்ப்பாணத்து மக்கள் அவருக்கு தங்களின் இறுதி அஞ்சலியை செலுத்த திரண்டபோது, அவர்களை சிறிலங்க இராணுவமும், காவல்துறையினரும் தடுத்துள்ளனர். மறுநாளும் பொது மக்கள் எவரும் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படவில்லை.

இறுதி ஊர்வலத்தின் போதும் அதில் கலந்து கொள்ள வந்த மக்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் அங்கு கொந்தளிப்பான சூழல் உருவாகியுள்ளது. ஆயினும் இறுதி ஊர்வலம் அமைதியாக நடைபெறட்டும் என்பதால் மக்கள் அமைதி காத்துள்ளனர். யாழ் பல்கலை மாணவர்களும் அஞ்சலி செலுத்த முற்பட்டபோது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்தே தங்களின் காட்டுமிராண்டித்தனத்தின் உச்சத்தை சிதையில் நாய்களை கொன்று வீசி எரியச் செய்து வெளிப்படுத்தியுள்ளனர் சிறிலங்க இராணுவத்தினர்.

இந்த இழி செயலை சிறிலங்க அரசோ அல்லது அதிபர் மகிந்த ராஜபக்சவோ கண்டிக்கவும் இல்லை, கண்டுகொள்ளவும் இல்லை. இவர்தான் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையே நல்லிணக்கம் ஏற்பட பாடுபடுவதாக கொழும்புவில் இருந்து பேசிக்கொண்டிருக்கின்றார்!

பார்வதி அம்மாளின் சிதையில் நாய்களைக் கொன்று போட்டதால் அவருக்கு எந்த அவமரியாதையும் ஏற்படப்போவதில்லை. இப்படிப்பட்ட நடவடிக்கையில் சிறிலங்க இராணுவம் ஈடுபடுவதும் முதல் முறையில்லை. தமிழருக்கு எதிரான இனப் படுகொலை போர் நடந்தபோது சிறிலங்க படையினருடன் நடந்து போரில் வீர மரணமடைந்த விடுதலைப் புலிகள் இயக்கதின் பெண் போராளிகளின் பிணத்தை புணர்ந்த ‘நாகரீக’ படையினர் அல்லவா சிறிலங்க இராணுவத்தினர். தாங்கள் புணர்ந்த பெண் போராளிகளின் படங்களை எடுத்து அதனை தங்களுக்குள் பரிமாறி மகிழ்ந்தவர்கள்தானே இந்தப் படையினர்!

போர்ப் படையோடு எந்த தொடர்பும் அற்ற ஊடகவியலாளரான இசைப் பிரியாவை வன்புணர்ச்சி செய்து...

நான் இறந்த பிறகு என் துப்பாக்கியைத்
தோழர்கள் எடுத்துக்கொள்வார்கள்.
அப்போதும் தோட்டாக்கள் சீறிப் பாயும்"

- [சே குவேரா]

விடுதலைக்காக போராடும் ஏந்த ஒரு வீரனும்
ஏப்போதும் இறப்பதில்லை..."

"கண்ணெதிரே நடக்கும் அநீதியை
தட்டிக்கேட்பவன் என்னைச்சேர்ந்தவன்..."

"புரட்சியாளனின் கல்லறைகளில் மலர்கள் மலர்வதில்லை.
புரட்சியின் விதைகளே கிடைக்கும்..."

"உலகின் எந்த மூலையிலும் ஏகாதிபத்தியம்
தலை தூக்குவதைக் கண்டு உங்கள் ரத்தம் சூடேறினால்
நீ என் தோழன்...”

சேகுவேரா .


புரட்சி என்பது ஆப்பிள் பழமல்ல ,
பழுத்தவுடன் விழுவதற்கு .
அதனை நீ விழ வை.....சேகுவேரா .

pen or sword


கார்க்கியின் பார்வையில்
முகப்பு பூ வாசம்..
பொறுக்கித்தனம் a.k.a பின்னவீனத்துவ அறம்…!

முதலில் கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக தன்னந்தனியாளாக நின்று தன் மேல் திட்டமிட்ட ரீதியில் பரப்பப்பட்டு வரும் அவதூறுகளையும், பாலியல் தாக்குதல்களையும் எதிர்கொண்டு அவற்றை வெற்றி கொண்டு வரும் தோழர் தமிழச்சி அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சம்பந்தமான தகவல்களை முழுமையாக இல்லாவிட்டாலும் துண்டு துக்கடாவாக அவ்வப்போது கேள்விப் பட்டிருந்தும் எதிர்விணையாற்றாமல் வெறும் பார்வையாளனாகவே இருந்து விட்ட தடித்தனத்திற்காக சுயவிமர்சனம் ஏற்றுக் கொள்கிறேன். இணையத்தை பாவிப்பது சமீப வருடங்களில் மிகவும் குறைந்து விட்டது என்பதை இதற்கான சமாதானமாக அல்லாமல் ஒரு தகவலுக்காக மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.

கடந்த 15ம் தேதியன்று கீற்று தளத்தில் தோழர் மினர்வா எழுதிய பதிவையும் அதைத் தொடர்ந்து தோழர் தமிழச்சி அவர்கள் எழுதிய பதிவையும் நண்பர் ஒருவர் சுட்டிக்காட்டிய பின் வாசித்த போது தான் ஒரு தொகுப்பாக இவ்விவகாரத்தில் நடந்துள்ள அனைத்து விஷயங்களையும் முழுமையாக அறிந்து கொள்ள முடிந்தது. விவகாரம் இன்னதென்று மறுபடியும் ஒருமுறை இங்கே விலாவாரியாக விவரித்து எழுதும் உத்தேசம் எனக்கு இல்லை. அவை இணையம் முழுக்க அனைவரும் வாசிக்கக் கிடைக்கிறது. குறிப்பாக தோழர் தமிழச்சியின் பதிவுகளிலும் கீற்றிலும் வாசிக்கக் கிடைக்கும் கட்டுரைகளை நண்பர்களுக்குப் பரிந்துரைக்கிறேன்.

இந்த விஷயத்தைப் பொருத்தளவில் நகரப் பேருந்துகளில் புட்டங்களைத் தேடியலையும் ஒரு நாலாந்தர பொறுக்கியைப் போல் நடந்து கொண்டிருக்கும் சோபாசக்தியை விட அவனை ஆதரித்து இணையத்தில் பேசி வரும் பெண்ணுரிமை_பின்னவீனத்துவ_பெரியாரிய புடுங்கிகள் தான் எனக்கு ஆச்சர்யம் ஏற்படுத்துகிறார்கள்.

மனிதகுல விடுதலைக்கான மாபெரும் தத்துவங்களை நமக்கு அளித்துச் சென்ற ஆசான்களை இழிவு படுத்திக் கவிதை எழுதிய கவிதாயினியிடம் கவியின் பொருளை விளக்கச் சொல்லிக் கோரியதையே பெண்ணுரிமைக்கு ஏற்பட்ட ஆகப் பெரிய ஆபத்தாக ஊதிப் பெருக்கி இணையத்தில் சாமியாடிய இந்த பீ.ந வாதிகளும் இன்ஸ்டன்ட் பெண்ணுரிமைப் போராளிகளும் இன்று சோபாசக்தி அவுத்துப் போட்ட கிழிந்த ஜட்டியில் முகம் பொத்தி நிற்கும் காட்சியைக் காண கண்கள் கோடி வேண்டும்.

இலக்கியம், பெண்ணுரிமை, பின்னவீனம் என்று பல்வேறு முகம் காட்டி வந்தாலும் தனது வயிற்றுப் பிழைப்புக்கு சோபாசக்தி எனப்படும் இந்தப் பொறுக்கி நாய் புலியெதிர்ப்பையே கைக் கொண்டிருந்தது. கை நிறைய உழைக்காமல் கிடைத்த காசு; பெரும் அரசாங்கங்களின் உளவு நிறுவனங்கள் அளிக்கும் பாதுகாப்பு; அது கொடுக்கும் திமிரும் கொழுப்பும்; சதா நேரமும் குடி. இதெல்லாம் சேர்ந்து அவரது இச்சைகளுக்கு எவளையும் வளைத்து விடலாம் என்கிற மைனர் மனோபாவத்தைக் கொடுத்திருக்கலாம்.

மைனர்களின் எத்து வேலைகளுக்கும் சித்து விளையாட்டுகளுக்கும் மயங்கி விட தோழர் ஒன்றும் உலகின் அழகிய முதல் பெண்ணில்லையே. நெருப்பென்று அறியாமல் நெருங்கிய மைனரின் பிடறியில் மிதித்துத் துரத்தியடித்துள்ளார் தோழர் தமிழச்சி. பிரான்சின் இரயில்வே நிலையம் அருகே நடந்தேறிய அந்தக் காட்சிகளைப் பெரியார் உயிரோடிருந்து கண்டிருக்க வேண்டும். கடந்த மூன்று ஆண்டுகளாக தோழர் தமிழச்சி மேற்படி மைனரும் ஈழத்துப் பிள்ளைப் பெருந்தகையுமான சோபாசக்தியின் இந்த இழிசெயலை பகிரங்கமாக அம்பலப்படுத்தி எழுதிய பின்னும் அவனோடு ஒரு நல்லுறவைப் பேணுவதில் இங்குள்ள சில ‘உலகின் அழகிய முதல் கவிதாயினிகளும்’ அந்தோனியாரின் பக்தர்களும் எந்த வெட்கமும் அடையவில்லை.

எத்தனையோ ஆண்டுகளாக பெரியாரிஸ்டு வேடம் புனைந்து இணையவெளிகளில் மிதந்து கொண்டிருக்கும் சுகுணா திவாகர் பிள்ளைவாள் கூட சோபாசக்தி பிள்ளைவாளின் இந்தச் செயல்களைக் கண்டிக்காமல் மௌனம் காத்திருப்பதை என்னவென்று சொல்லலாம்? ‘சாதிபுத்தி’ என்று சொல்லலாமா?

சுகுணா, உங்கள் மேல் இன்னமும் கொஞ்சமே கொஞ்சம் மரியாதை மீதமிருக்கிறது. பார்ப்பனியவாதிகளோடு இணையத்தில் நீங்கள் சமரசமின்றி மோதிய அந்த நாட்கள் நினைவிலாடுகிறது. ஆனால் இன்று நீங்கள் காக்கும் இந்த மௌனம் மீதமிருக்கும் அந்த மரியாதையைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைத்து வருகிறது. இதே ‘சாதிபுத்தி’ எனும் குற்றச்சாட்டை வளர்மதி உங்கள் மேல் வைத்தபோது அவர் மேல் ஆத்திரப்பட்டிருக்கிறேன். ஆனால், இன்றோ வளர்மதியின் வார்த்தைகள் உண்மையாய் இருப்பதற்கான சாத்தியங்களை உங்கள் மௌனம் மெய்ப்பிக்கிறது. உங்கள் மேல் இங்கே நான் வைத்திருக்கும் கடுமையான வார்த்தைகளை மிகுந்த வருத்தத்தோடே எழுதுகிறேன்.

சென்ற வருடம் ஏப்ரல் மாதம் இக்ஸா அரங்கில் கூடிக் கும்மியடித்த பெண்ணுரிமைப் போராளிகள் இப்போது எங்கே போய் ஒளிந்து கொண்டார்கள்? Cocktail சீமாட்டிகளினதும், கூட்டுக்கலவிக்கு உடன்படும் சீமாட்டிகளினதும் கெட்டவார்த்தைக் கவிதையால் கார்ல் மார்க்சை ஏசும் அல்பைகளினதும் உரிமை மட்டும் தான் பெண்ணுரிமையா? பொதுவாழ்க்கையில் ஒழுக்கத்தைப் பேண வேண்டும் என்று நினைக்கும் பெரியாரியப் பெண் தோழரின் உரிமை பெண்ணுரிமையில் சேர்த்தியில்லையா? தனது இச்சைகளுக்கு உடன்பட மறுத்து செருப்பால் அடித்துத் துரத்திய அந்தப் பெண் தோழரை இழிவு படுத்தும் விதமாக ‘நான் அவளோடு படுத்தேன்’ என்று பச்சையாக புளுகியிருக்கிறான் ஒரு பொறுக்கி நாய். அதற்கு நாலைந்து மலப்புழுக்கள் ஆதரவு தெரிவித்து பிண்ணூட்டமிட்டுள்ளனர். இதை வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது தான் பின்னவீனத்துவ அறமா?

இவர்கள் போற்றும் பெண்ணுரிமை என்பது ஷக்கீலா படம் பார்க்கும் வாலிப வயோதிப அன்பர்கள் அது போன்ற திரைப்படங்களுக்குத் தடையேற்படும் போது கோரும் உரிமைக்கு ஒப்பானது என்பதை இப்போது தெளிவாக நிரூபித்துள்ளனர். இந்த வாலிப வயோதிப அன்பர்கள் பட்டியலில் அந்தோனிசாமி மார்க்ஸ் போன்ற ரெண்டு பொண்டாட்டிக்கார மைணர்கள் இருப்பது கூட ஆச்சர்யமில்லை; சுகுணா திவாகர் போன்ற அக்மார்க் முத்திரை பெற்ற பெரியாரிஸ்டுகளும் இருப்பது தான் எமக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது. பொதுவெளியில் செயல்படும் ஒரு பெண்ணைக் குறித்து சோபா எழுப்பியிருக்கும் இந்தக் கீழ்தரமான குற்றச்சாட்டின் பின்னேயுள்ள மைணர் மனோபாவத்தைக் குறித்து ட்விட்டரில் கருத்துத் தெரிவித்திருக்கும் கணித விஞ்ஞானி ரோசாவசந்த், சோபாவின் வக்கிர வார்த்தைகள் ‘நேர்மையுடனும் கம்பீரத்துடனும்’ இருக்கிறது என்று சான்றளித்துள்ளார். எந்த ஆதாரமும் இல்லாமல் சாட்சியமும் இல்லாத நிலையிலும், இந்தக் குற்றச்சாட்டை அதில் சம்பந்தப்பட்ட தோழர் தமிழச்சியே மறுத்துள்ள நிலையிலும், கடந்த மூன்றாண்டுகளாகவே சோபாவின் அத்துமீறலைப் பற்றியும் செருப்பால் அடித்தது பற்றியும் அவர் தொடர்ந்து எழுதிவந்துள்ள நிலையிலும் இப்படி ஆபாசமாகப் பேசுபவனை என்னவென்று அழைக்கலாம்? சுரேஷ் கண்ணனைக் கேட்டால் ‘மலப்புழு’ என்றழைக்கலாம் என்று சொல்வாராயிருக்கும்.

இது தான் இவர்களின் அறம். அதாவது செலக்டிவ் அறம். மேட்டுக்குடி சிந்தனைகள் கொண்ட சீமாட்டிகளுக்கும் அலுக்கோசுகளுக்கும் ப்ரீசெக்ஸ் பேசும் பெண்களுக்கும் ஆதரவான அறம். பெண்களுக்கான பாலியல் விடுதலை என்று இவர்கள் பேசுவதெல்லாம் காபரே நடனம் ஆட காபரே டான்சருக்கு இருக்கும் உரிமை குறித்து காபரே ரசிகன் பேசுவதைப் போன்றது. தமது பாலியல் இச்சைகளுக்கும் வக்கிரங்களுக்கும் இசைவான பெண்களின் ‘உரிமை’ என்று பேசும் இவர்களுக்கும் பெண்ணுரிமைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பெண்ணுடலை ஒரு நுகர்வுப் பண்டமாக அனுபவிக்கப் போட்டுக் கொள்ளும் ஒரு தத்துவ முகமூடி தான் பாலியல் விடுதலை, பின்னவீனம், இத்யாதி இத்யாதி எல்லாம்..

இக்ஸா அரங்கின் நாயகியான கவிதாயினி போன்றவர்கள் இவர்களுடைய உலகின் காபரே தேவதைகள். அந்த ஆபாச ஆட்டத்தைக் கேள்விக்குள்ளாக்கியதும் இவர்கள் என்ன ஆட்டமெல்லாம் ஆடினார்கள்? இன்று அதே கும்பலில் ஒரு பொறுக்கிப் பயல் போகிற போக்கில் பொதுவாழ்வில் இருக்கும் ஒரு பெண்ணைப் பற்றி எந்த அடிப்படையும் இல்லாமல் புளுகியதைக் கண்டும் காணாமல் போவது தான் இவர்களின் பின்னவீனத்துவ அறம். ப்ரான்ஸ் தேசத்துப் பொறுக்கி தோழர் தமிழச்சி குறித்து சொன்னது போல இவர்கள் வீட்டுப் பெண்கள் குறித்து எவராது பேசியிருந்தால் இவர்கள் அவனையும் ஒரு மனிதனாக மதித்து பேட்டி கண்டு வெளியிடுவார்களா என்று தெரியவில்லை. பாலியல் விடுதலை என்பதெல்லாம் ஊரார் வீட்டுப் பெண்களுக்கு மட்டுமா அல்லது இவர்கள் வீட்டுப் பெண்களுக்கும் தானா என்பதையும் அவர்கள் தெளிவுபடுத்தி விடலாம்.

தோழர் தமிழச்சியின் எதிர்விணை – http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=13087&Itemid=263

தோழர் மினர்வாவின் பதிவு – http://www.keetru.com/index.php?

Friday, February 25, 2011

எதிர்காலம்


எதிர்காலம்
இருள் என்கிறது
பகல்.
எதிர்காலம்
ஒளி என்கிறது
இரவு.
நம் எதிர்காலத்தை
எது என்று சொல்லப் போகிறாய்?

ஆனால்


மின்னல் போலத்தான்
என்னைக் கடந்து போனாய்.
ஆனால்
மரணம் போலல்லவா
என்னைக் கவர்ந்ந்து போய்விட்டாய்

Thursday, February 24, 2011

அன்பளிப்பு


ஒரு நாள் இரவில்
வாயிற்படி நெரிசலில்
யாருக்கோ சில்லறை உதவி
இறங்கி ஏறி தொங்கி வந்த இருள் பயணத்தில்
தொலைத்து விட்டேன்
உன் அன்பளிப்பை.

உன்னையே தொலைத்துவிட்டதாய்
வழி நெடுகப் பதறி
வீடு வந்தும் உறங்காமல்
விசையுந்தேறி
பதினைந்து கல் பயணித்து
வழியோரம் துழாவி
கண்டேன்..
கண்டேன் சீதையை என்பது போல்
கண்டேன்...

நெஞ்சொடு வைத்து
நிமிஷங்களாய் நெகிழ்ந்து
பத்திரமாய் ஏந்தி வந்து
இரவு முதிர்ந்த வேளையில்
என் வைப்பறையில் கொண்டுவந்து வைத்து

இன்று வரைக் காப்பாற்றி
எடுப்பதில்லை எதற்கும்...

என் மார்பிலும் மடியிலும்
வேறு எந்தப் பயனுக்கும் இன்றி
வாஞ்சையுட்ன் இருக்கும்
நீ தந்த
உன்
பழைய கைக்குட்டை

குறள்


ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேரும் தகைத்து -குறள்
பொருள்:
வீரம் உடைய அரசன் ஒடுங்கி இருத்தல்
போருக்கு எழுந்த ஆட்டுக் கடா
தாக்குவதற்காகப்
பின்னோக்கி நகர்வது போலாம்.

Wednesday, February 23, 2011


நம் கடைசி வாழ்வாதாரம்
நம்பிக்கை

துனீசியா , எகிப்து
இவை இரண்டும் இன்றைய இணையப் புரட்சிகள்.
இளைஞர்களே
வெறுமனே வெட்டியாய் வாதம் செய்வதை விடுத்து
ஒன்றுபடுங்கள்
ஒன்று சேராதவர்களை
உடனடியாக விலக்குங்கள்.
தமிழர்களின் பெரும் பின்னடைவு
கருத்து மோதல்.
அவ்வளவு பிரிவினைகள்
நமக்குள்ளே விதைக்கப் பட்டுள்ளன.

Tuesday, February 22, 2011


இடையில் வரும் உறவுகளில்தான் முன்னாள் .... உண்டு.
முன்னாள் காதலன்...
முன்னாள் மனைவி..
முன்னாள் நண்பன்..
முன்னாள் கணவன் ..
ரத்த சொந்தங்களில் இல்லை

உண்மைகளை எதார்த்தமாக
ஏற்றுக்கொள்ளும்வரை
உலகத்தில்
உண்மையானவர்களே கிடையாது.

வாழ்க்கையே ஒரு பயணம்தான்.
பயணம்கூட வாழ்க்கையின் ஒத்திகையே.

வாழ்வும் பயணங்களும்
வாழ்க்கைப் பயணங்கள்தாம்.

இரண்டுக்கும் துணை வேண்டும்- மனம்
ஏற்கின்ற இணை வேண்டும்.

இல்லையெனில் இன்பமில்லை;
இரண்டாலும் பய்னுமில்லை.

நீ யாருக்கு எஜமானன்
என்று எண்ணுகிறாயோ
அவருக்கு
நீ அடிமையாவாய்.

நீ யாருக்கு அடிமை
என்று ஒப்புகிறாயோ
அவருக்கு
நீ எஜமானனாவாய்.

என் ஜென்மம்



என் ஜென்மம்

எப்போதோ நீ அன்னமிட்ட் காரணத்தால்
நீ
முகவரி மாறிப் போன பின்னும்
இரைக்கென்று
எவரெவர் கைகளையோ
எதிர்பார்த்து நின்றும்
உன் போல் தோற்றமுடன்
வருவோர் போவோர யாவரையும்
வாழ்த்திக் குழைந்து
அவர் பின்னே சில தூரம் ஓடி
வழக்கம்போல் ஏமாற்றத்துடன்
வாடித் திரும்பி

அருநிழலோ,
வெறு மணலோ,
குப்பையோ,
குளக்கரையோ,
சருகோ,
புதர் மறைவோ என...
உரிமையிலா ஓரிடத்து
ஒடுக்க மூலையொன்றில்
அடுத்து வரும் விரட்டலிடை
ஓய்வாய் சிலகணங்கள்..

உன் நினைவில் உயிர்த்துறைந்து
என்றோ
ஒரு நாளில்
இரண்டாம் மரணமுற்று
நாறி
நாறிப் போன தன் வாழ்வை
ஊருக்குப் பறைசாற்றி

மண் தின்ன மறைந்துவிடும்
சுவடு வரலாறு
ஏதுமில்லா தெருப்பிறப்பாய்

தீர்ந்து போனதென் ஜென்மம்.

Monday, February 21, 2011

மாணவமரணங்கள்


மாணவமரணங்கள்

அன்புசால் நண்பர்களே,
தஞ்சை தமிழ்ப் பல்கலக் கழகப் பேராசிரியர்
முனைவர் பழநிவேல் அவர்கள்
மாணவ மரணங்கள் பற்றிய
ஆய்வு நூலே வெளியிட்டிருப்பதாகவும்
ஆய்வுகள் தொடர்வதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

நமக்கு இது தொடர்பாக உதவிடவும் முன்வந்துள்ளார்கள்.
மிக்கநன்றி.
எல்லாம்
உங்கள் முயற்சியால்தான்,
தொடரட்டும் உங்கள் பணி.
எல்லாவற்றுக்கும் நன்றி.

ஊருக்குச் சொன்னது நீதான்.


எனக்குள்
இன்னொரு நான் இருந்ததை
உளவறிந்து
ஊருக்குச் சொன்னது
நீதான்.

அந்த நிலாதான்



நீயும் நானும் சேர்ந்து ரசித்த
அந்த ஒரே ஒரு நிலாதான்
எல்லா நிலாக்களைவிடவும்
அழகானது.

Saturday, February 19, 2011

palanivel venkataachalam


மதிப்பிற்குரிய அய்யா !
இந்த கருத்தை கூறுவதற்கு என்னை மன்னித்துவிடுங்கள் .இந்த மாணவர்கள் தன்னம்பிக்கை இல்லாதவர்கள் .ஆயக்கரன்புலத்தில் படித்த
நாட்கள் இன்னும் பசுமையாக என் நினைவில் உள்ளது .பத்தாம் வகுப்பிலும் பனிரெண்டாம் வகுப்பிலும் செம்மையாக தண்டனை தந்த ஆசிரியர்கள் இன்னும் நினைவில் உள்ளனர் .ஆனால் அன்று கோபப்பட்டது உண்மைதான் .ஆனால் தற்கொலைக்கு முயன்றதில்லை .மாறாக முடிந்த அளவு முயற்சித்தோம் .இன்று ஓரளவேனும் நிம்மதியாய் இருப்பதற்கு அதுவே காரணம் .
ஆனால் இன்றைய மாணவர்களிடம் எதுவும் சொல்ல முடியவில்லை .சின்ன விழயதுக்கும் கோபபடுகின்றனர்.இவர்கள் எப்படி வரும் போட்டி உலகத்தை சமாளிப்பர்.பொழுது போக்கு சினிமா விளையாட்டு இதற்கு செலவிடும் நேரமே அதிகம் .இது தவறென்று சொல்லவில்லை .நேரத்தின் மதிப்பை உணருங்கள் என்றே சொல்கிறேன் .
உதாரணதிற்கு ஒன்று ! இன்று முதல் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆரம்பம் .நாளை உங்கள் மாணவரிடம் கேட்டு பாருங்கள் .இறுதியாண்டு தேர்வு நெருங்கி விட்டதே . என்ன செய்தாய் என்று ?
உங்கள் கருத்தை சொல்லுங்கள் நாளை சிந்திப்போம் !சிந்திப்போம் !!

கருத்து.

இந்திய திருநாட்டின் ஈடு இணையற்ற செல்வங்கள் நம் மாணவ மணிகள் .இவர்கள் தங்கள் உயிரை மாய்த்து கொள்வதை ஆசிரியர்களாகிய நாம் பார்த்து கொண்டிருக்க முடியாது.இதற்கு ஏதோ ஒரு வகையில் நாம் காரணம் என்பதுதான் சற்று நெருடலான விஷயம்.ஒரு மாணவன் தன் உயிரை மாய்த்து கொண்டால் அது அவனது குடும்பத்திற்கு மட்டும் இழப்பு அல்ல.நம் ஆசிரியர் சமுகத்தின் பெருமைக்கே பேரிழப்பு.ஆசிரியர்களாகிய நாம் நம் மாணவர் பருவ நிகழ்வுகளை சற்று திரும்பி பார்த்தோமேயானால் இது போன்ற விரும்ப தகாத நிகழ்வுகளுக்கு முற்று புள்ளி வைக்கலாம் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. அன்புடன்.........பா. ஆனந்த்முருகு,ஆசிரியர்  

Friday, February 18, 2011


உலக ஜாதிகளே ஒன்று கூடுங்கள்
உலக ஜாதிகளில் ஒன்று குறையுங்கள்

ஜாதிகள் ஒழிப்போம்
வாருங்கள் வாருங்கள்
எல்லா ஜாதிகளும்

உனக்கும் எனக்கும்
ஒரே உறவு
மொழி.
உனக்கும் எனக்கும்
ஒரே பகை
தமிழ்.

செந்தமிழில்
அரசாயன மாற்றம்..
செம்மொழி தமிழ்.
பன்னாட்டு பயண நிலையத்தில்
விலக்கப்பட்ட சொல்
தமிழன்.

புலிகளின் எண்ணிக்கை
குறைந்து விட்டதாம் -
இந்தியா கவலை.
மிருகக் காட்சி சாலையிலும்
காலியாயிருக்கிறது -
புலிக்கூண்டு.

மளிகைக் கடையில்
சி பி ஐ விசாரணை-
புலியா? புளியா?

அபயக் குரல் கேட்டுவிடாமல்
கொளுத்து
ஆயிரம் வாலா.

அவர்களுக்கு (ஈழத்தமிழர்களுக்கு)
அஞ்சலி செலுத்தினால்கூட
நீ வீரன்தான்.

புதிய அகராதி..
வீர விலங்கு -
நாய்.
வெற்றி விலங்கு-
நரி.

தோல்விகள்
ஞானம் தரும்.
நமக்கு மட்டும்
மரணம்.

கண்ணீர் விடட்டும்
கதறி அழட்டும் ...
காசாகிவிடும்
காகிதங்கள்.

கத்தரிக்காயும் விற்கும்
அப்படியே
துப்பாக்கியும் விற்கும்-
அண்டை நாடுகள்.

ஆன்டனிக்கும்
ஆண்டர்சனுக்கும்
இடையில் -
இந்தியா.

நூறு நாள் வேலை
ஒரு ரூபாய் அரிசி -
உனக்கென்ன கவலை.

மானாட மயிலாட
மதுக்கடையில் நீயாட -
வாழ்க ஜனநாயகம்.

உலக ஜாதிகளே ஒன்று கூடுங்கள்
உலக ஜாதிகளில் ஒன்று குறையுங்கள்.

அதன் பேர்
தமிழ்ச் சாதி!

Thursday, February 17, 2011


அன்புத் தோழர்களே!
வணக்கம்.
2ஜி, மீனவர்கள்,அரசியல் சூதாட்டம்,
ஈழத்தமிழர்கள், இந்தியா,நம் பாமர வாக்காளர்கள்,
ஜாதியம், மதங்கள்,தேர்தல், சூடு சுரணையற்ற
வெட்கங்கெட்ட கூட்டனி கோஷங்கள்...
என ... கவலைப் பட நிறைய நிறைய கொட்டிக் கிடக்கையில்..

ஒரே ஒரு சின்ன விஷயத்துக்காக உங்களை அணுகுகிறேன்.
மனம் உவந்து உதவுங்கள்.

ஆசிரியர் தரும் தண்டனைகளால்
மாணவமரணங்கள் பெருகி வருகின்றன.
இதைத் தடுத்துக் காக்க
உடனடியாக ஏதாவது செய்ய வேண்டும்.
ஆதலின் விரைவான ஒரு நாளில்
ஒரு கருத்தரங்கம் வைத்து
னல்ல சிந்தனை உடைய ஆசிரியர்கள்
கல்விச் சிந்தனையாளர்கள்,
சான்றோர்கள்,
இவர்களை அழைக்க வேண்டும்
தமிழ்நாடெங்கிலும் உள்ள பெரியோர்கள்,
தீவிர இளைஞர்கள் இவர்களின் இணைப்பை எனக்கு
ஏற்படுத்தித் தாருங்கள்.

உடன் செய்து உதவிட வேண்டுகிறேன்

Monday, February 14, 2011


என் அன்பே
என்னைத் தெரிகிறதா ?

நான்தான் அந்த நான்!

உன் குழவிப் பருவத்தில்
உனைக் குழைத்து வாசித்த
குழல்தான் நான்!

உனை வருடிச் சிலிர்த்த
இளங்காற்றுதான் நான்!

நீ தீண்டி மகிழ்ந்த
தேன்மலர்தான் நான் !

நீ நடந்தாடிய
தூமணல்தான் நான்!

உன் பூம்பாதம் ஏந்திய
பூவிதழ்கள்தான் நான்!

உன் துகிலுக்கும் துயிலுக்கும்
தூளியாய் கிடந்தது
நான்தான் !

நீ வீசியெறிந்து
விளையாடிய பாவை
நான்தான்!

நீ தொட்டுச் சிலிர்த்த
பனித்துளி
நான்தான்!

நீ
பட்டுப் புரண்ட
பச்சைப் புல்வெளி
நான்தான்!

நீ
தட்டித் தெறித்த
தண்ணீர்த் துளி
நான்தான்!

உன்
தூண்டலில் எரிந்த
தீச் சுடர்
நான்தான் !

உன்
விழிகள் விரிந்த
வியப்புகள்
நான்தான்!

உன்
இமைகளைத் திறந்த
வெளிச்சம்
நான்தான்!

உன்
கனவுகள் கொண்ட
வண்ணங்கள்
நான்தான்!

நீ
கேட்டு மகிழ்ந்த
கதைத் திரள்
நான்தான்!

நீ
சொல்லிச் சிரித்த
சொற்கவி
நான்தான்!


உன்னை வரைந்த
தூரிகை
நான்தான்!

உன்னை எழுதிய
கோலமும்
நான்தான்!

உன்
மொழிக்கென செந்தேன்
கொணர்ந்தது
நான்தான்!

உன் வீதியில் நின்று
இரந்ததும்
நான்தான்1
.....


இன்று...
உயிர் பிரியுமுன்

உன்னைக் காணத் துடிப்பதும்
அதே
அதே
நான்தான்!

Saturday, February 12, 2011

வெள்ளி, 11 பிப்ரவரி, 2011
விகடன் வெளியிட்டிருக்கும் எம்மினத் தலைவன் பிரபாகரன் பற்றிய -25 குறிப்புகள்,

விகடன் வெளியிட்டிருக்கும் பிரபாகரன்-25 குறிப்புகள்,

நிச்சயம் படிப்பவரைச் சிலிர்க்கச் செய்திருக்கும். இந்த விஷயங்கள் அனைத்துமே, தமிழர்கள் பெரும்பாலானோருக்குத் தெரிந்த உண்மைகள்தான்.
ஆனாலும்,

01.மனதுக்குப் பிடித்த ஒரு புத்தகத்தை எத்தனை முறை வாசித்தாலும் மனம் புதிய உணர்வைப் பெறுவதைப் போலத்தான், பிரபாகரன் பற்றிய நிகழ்வுகளைப் படிப்பதும். தமிழனுக்கு வீரத்தின் அர்த்தத்தை தனது வாழ்க்கை மூலம் எடுத்துக் காட்டியவர் அல்லவா...

02.தம்பி எனத் தமிழர்களால் அழைக்கப்படும் அண்ணன். 30 ஆண்டு காலம் இலங்கை அரசுக்குக் கிலியூட்டி வரும் புலிப் படைத் தலைவர்
. வீரத்தின் விளைநிலமாக தமிழ் ஈழத்தை மாற்றிக்காட்டிய மனிதர்!

அரிகரன் - இதுதான் அப்பா வேலுப்பிள்ளை முதலில்வைத்த பெயர். ஒரு அண்ணன், இரண்டு அக்காக்களுக்கு அடுத்துப் பிறந்த கடைக்குட்டி என்பதால், துரை என்றுதான் எல்லாரும் கூப்பிடுவார்கள். பிறகு என்ன நினைத்தாரோ, பிரபாகரன் என்று மாற்றுப் பெயர் சூட்டியிருக்கிறார் அப்பா!

வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பெரியசோதி, சின்னசோதி, சந்திரன், குட்டிமணி, தங்கத்துரை, சந்திரன், பிரபாகரன் ஆகிய ஏழு பேர் சேர்ந்துதான் விடுதலை இயக்கத்தை முதலில் தொடங்கினார்கள். இதற்குப் பெயர் வைக்கவில்லை. பிரபாகரன்தான் அணியில் இளையவர் என்பதால், ‘தம்பி' என்றார்கள். எல்லார்க்கும் தம்பியானதும் அப்படித்தான்!



03.பிரபாகரனுக்கு அரசியல் முன்னோடியாக இருந்தவர் பொ.சத்தியசீலன். "போலீஸ் நிலையங்களைத் தாக்கி ஆயுதங்கள் எடுக்க வேண்டும்" என்று இவரைப் பார்த்து பிரபாகரன் கேட்க, "எடுத்தால் எங்கே வைப்பது" என்று சத்தியசீலன் திருப்பிக் கேட்க... அதன் பிறகுதான் காட்டு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்!

04.பிரபாகரன் அடிக்கடி படித்த நாவல் - அலெக்ஸ் ஹேவியின் ‘ஏழு தலைமுறைகள்'. அதில் ‘இடியும் மின்னலும் இல்லாமல் மழை பொழியாது. போராட்டம் நடத்தாமல் யாரும் எதையும் தர மாட்டார்கள்' என்ற வரிகளை அடிக்கோடு போட்டுவைத்திருந்தார்!

05.மிக மிக வேகமாக நடக்கும் பழக்கமுடையவர் பிரபாகரன். பள்ளிக்கூடம் போகும்போது சட்டைப் பையில் இருக்கும் பேனாவை இடது கையால் பிடித்துக்கொள்வாராம். அந்தப் பழக்கம் பிற்காலத்திலும் தொடர்ந்திருக்கிறது!

06."ஏன் எப்போதும் சீருடையில் இருக்கிறீர்கள்?" என்று வெளிநாட்டுத் தமிழர் ஒருவர் கேட்டபோது பிரபாகரன் சொன்னது, "யாரும் அணியத் துணியாதது இந்த உடைதான். அதனால்தான் எப்போதும் இதில் இருக்கிறேன்."

07."பிரபாகரன் ஒருபோதும் புகைத்தது இல்லை. மது அருந்தியதும் கிடையாது. மற்றவர்களிடமும் இப்பழக்கத்தை அவர் விரும்பவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பில் புகைபிடிக்கும் பழக்கம்கொண்ட ஒருவரை பிரபாகரன் சகித்துக்கொண்டார் என்றால், அது பாலசிங்கமாகத்தான் இருக்கும். பாலாவிடம் இருந்து வரும் சிகரெட் நெடி பிரபாகரனுக்குப் பிடிப்பதில்லை. எனவே, பிரபா முன்னிலையில் பாலாவும் சிகரெட் பிடிப்பதில்லை" என்கிறார், பாலசிங்கத்தின் மனைவி அடேல்!

08.அக்காவின் திருமணத்தையட்டி தனக்கு அணிவிக்கப்பட்ட மோதிரத்தை விற்றுத்தான் அமைப்புக்கு முதல் துப்பாக்கி வாங்கப் பணம் கொடுத்தார் பிரபாகரன். அதன் பிறகு அவர், நகை அணிவதில்லை!

09.எந்த ஆயுதத்தையும் கழற்றி மாட்டிவிடுவார். ஆயுதங்கள் தொடர்பான அனைத்து ஆங்கிலப் புத்தகங்களின் மொழிபெயர்ப்புகளும் அவரிடம் இருந்தன. ‘தொழில்நுட்ப அறிவு இல்லாதவன் முழுமையான போராளியாக முடியாது' என்பது அவரது அறிவுரை!


10.ஒவ்வொரு நவம்பர் மாதமும் 25, 26, 27 ஆகிய மூன்று நாட்களும் பிரபாகரன் உண்ணாவிரதம் இருப்பார். 26 அவரது பிறந்த நாள். 27 மாவீரர் நாள். அன்று மாலை மட்டும் தான் திரையில் தோன்றி அனைவருக்குமான உரையை நிகழ்த்துவார்!

11.‘இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி' என்ற வார்த்தைகளைத்தான் அவர் தனது டைரியில் எழுதிவைத்திருப்பார்!

12.போரில் யார் காயமடைந்து பார்க்கப்போனாலும், ‘பொன்னியின் செல்வன்ல வரும் பெரிய பழுவேட்டரையருக்கு 64 வீரத் தழும்புகள் உண்டு' என்று சொல்லித் தைரியம் கொடுப்பாராம் பிரபாகரன்!


13.ஆறு கோடியே 43 லட்சம் ரூபாய் பிரபாகரனுக்கு எம்.ஜி.ஆர். கொடுத்திருக்கிறார். பிரபாகரன் கொடுத்த துப்பாக்கி ஒன்றைத் தனது தலையணைக்குக் கீழ் எம்.ஜி.ஆர். வைத்திருந்தார்!

14.பேனாவை மூன்று விரல்களால் பிடித்துத்தான் அனைவரும் எழுதுவார்கள். பிரபாகரன் எழுதும்போது ஐந்து விரல்களாலும் பிடித்திருப்பார்!

15.பிரபாகரனுக்குப் பிடித்த புராணக் கதாபாத்திரம் கர்ணன். "தன்னிழப்புக்கும் உயிர்த் தியாகத்துக்கும் ஒவ்வொரு மணித்துளியும் தயாராக இருந்தவன் கர்ணன். அவனை எப்போதும் நினைப்பேன்" என்பார்!

16.தமிழீழம் கிடைத்த பிறகு எனது பணி காயம்பட்ட போராளிகளைக் கவனிப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்களின் முன்னேற்றம் பற்றியதாகவும் மட்டுமே இருக்கும் என்று பிரபாகரன் பகிரங்கமாக அறிவித்திருந்தார்!

17.பிரபாகரன் குறித்து தங்களது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் மிக உயர்வாக எழுதிய இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரிகள் மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங், ஜெனரல் சர்தேஷ் பாண்டே, ஜெனரல் திபேந்திரசிங். இவர்கள் மூவரும் இந்திய அமைதிப் படைக்குத் தலைமை வகித்து பிரபாகரனுடன் மோதியவர்கள்!


18.அநாதைக் குழந்தைகள் (போரில் பெற்றோரை இழந்தவர்கள்) மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்திருந்தார் பிரபாகரன். அவர்களைப் பராமரிக்க செஞ்சோலை சிறுவர் இல்லம், காந்தரூபன் அறிவுச் சோலை ஆகிய காப்பகங்களை வைத்திருந்தார். பெற்றோர் இல்லாத அநாதையாக அமைப்புக்குள் வந்து பெரிய போராளியாக ஆகி மறைந்தவர் காந்தரூபன்!

19.உயிர் பறிக்கும் சயனைட்தான் எங்கள் இயக்கத்தை வேகமாக வளர்த்த உயிர்' என்றார் பிரபாகரன்!

20.பிரபாகரனைச் சிலர் குறை சொன்னபோது, அமைப்பில் இருந்து ஒன்றரை ஆண்டுகள் விலகி இருந்தார்!

21.பிரபாகரனிடம் நேரடியாக போர்ப் பயிற்சி பெற்ற முதல் டீம்: கிட்டு, சங்கர், செல்லக்கிளி, பொன்னம்மான். இரண்டாவது டீம்: சீலன், புலேந்திரன். மூன்றாவது டீம்: பொட்டு, விக்டர், ரெஜி. இவர்கள்தான் அடுத்து வந்தவர்களுக்குப் பயிற்சி கொடுத்தவர்கள்!

22.தன் அருகில் இருப்பவர் குறித்து யாராவது குறை சொன்னால் பிரபாகரன் பதில் இப்படி இருக்குமாம், "நான் தூய்மையாக இருக்கிறேன். இறுதி வரை இருப்பேன். என்னை யாரும் மாற்ற முடியாது. நீங்கள் குறை சொன்னவரை என் வழிக்கு விரைவில் கொண்டுவருவேன்!"

23."ஒன்று நான் லட்சியத்தில் வென்றிருக்க வேண்டும். அல்லது போராட்டத்தில் இறந்திருக்க வேண்டும். இரண்டும் செய்யாத என்னை எப்படி மாவீரன் என்று சொல்ல முடியும்?" என்றுஅடக்க மாகச் சொல்வார்!

24.மிக நெருக்கடியான போர்ச் சூழல் நேரங்களில் பெட்ரோல் அல்லது ஆசிட்டுடன் ஒருவர் பிரபாகரனுடன் இருப்பாராம். அவருக்கு ஏதாவது ஆனால், உடனேயே உடலை எரித்துவிட உத்தரவிட்டிருந்தார். எதிரியின் கையில் தன் சாம்பல்கூடக் கிடைக்கக் கூடாதுஎன்பதில் தெளிவாக இருந்திருக்கிறார்!

25.‘தமிழீழ லட்சியத்தில் இருந்து நான் பின்வாங்கினால் என்னுடைய பாதுகாவலரே என்னைச் சுட்டுக் கொல்லலாம்' என்று பகிரங்கமாக அறிவித்திருந்தவர்.

நன்றி விகடன்.



Thursday, February 10, 2011

தலையணை

 படுக்கை...
ஒரு சுகம்
ஒரு இன்பம்
ஒரு ஓய்வு
ஒரு உயிர்ப்பு
ஒரு மீட்சி
ஒரு மாற்றம்
ஒரு தெளிவு
ஒரு மெலிவு
ஒரு முடிவு
சில சமயம் ....
அது ஒரு  ஞானம் !
 

Wednesday, February 2, 2011

என்னே அக்கறை!


என்னே அக்கறை!எம்.சோமு, விழுப்புரத்திலிருந்து எழுதுகிறார்: "2ஜி' விவகாரத்தில், பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட மறுக்கும் மத்திய அரசின் சார்பில், நிதி அமைச்சர், புத்தம் புது குண்டு ஒன்றை கொளுத்திப் போட்டிருக்கிறார்."கடந்த 1998ல், தே.ஜ., கூட்டணி ஆட்சி காலத்தில் பின்பற்றப்பட்ட கொள்கைகளால், அரசுக்கு 1.45 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதைப்பற்றி எதிர்க்கட்சிகள் வாய் திறக்காதது ஏன்?' என்று வினா எழுப்பியுள்ளார்.காங்கிரஸ் ஆட்சியில் அமர்ந்து எட்டு முழு ஆண்டுகள் முடியப் போகிறதே... இத்தனை ஆண்டுகளாக எங்கே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்? அப்போதே ஒரு கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட்டிருக்க வேண்டியது தானே? பிரணாப் கூறுவது போல், 1.45 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருந்து, காங்கிரஸ் இவ்வளவு காலம் அமைதியாக இருந்திருக்கிறதென்றால், இந்த நாட்டின் மீதும், அதன் சொத்தின் மீதும், அது எவ்வளவு அலட்சியமாக இருந்து வந்திருக்கிறது என்பது தெரிகிறது.அது சரி... காங்கிரசுக்கு நாட்டின் மீது அக்கறை இருக்குமாயின், வெளிநாடுகளில் முடங்கிக் கிடக்கும் 70 லட்சம் கோடி கறுப்புப் பணத்தை, சும்மா பார்த்துக் கொண்டிருக்குமா? அதைப் பற்றி யாராவது பேசினாலேயே, அரசுக்குப் பற்றிக்கொண்டு வருகிறதே!அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில், காங்கிரஸ் கட்சியும், அதன் பிரதிநிதிகளும் கூறும் எந்தவொரு சமாளிப்பையும், எதிர் குற்றச்சாட்டுகளையும், மக்கள் நம்பத் தயாராக இல்லை. 1.76 லட்சம் கோடி ரூபாய் ஸ்பெக்ட்ரம் ஊழல், மக்கள் ஒவ்வொருவர் மனதிலும், பசுமரத்தாணி போல பதிந்து விட்டது. அதன் விளைவை, எதிர்வரும் தேர்தல்களில் காங்கிரஸ் சந்தித்து, அதற்குரிய விலையைக் கொடுத்தே ஆக வேண்டும்.




முன் உதாரணமாக திகழ வேண்டாமா?ஜே.ராஜகுமார், திருப்பூரிலிருந்து எழுதுகிறார்: பொது வாழ்வில் ஈடுபட்ட அன்றைய தலைவர்கள் காமராஜர், கக்கன் ஆகியோரை நினைத்து பார்க்கும்போது, இன்றைய பொது வாழ்வில் ஈடுபட்டிருக்கும் அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள், தங்கள் தகுதிக்கு மேல், மிகுந்த எதிர்பார்ப்புகளை கொண்டிருக்கின்றனர். அன்றைய அரசியல் தலைவர்கள், தங்களின் வாழ்க்கையை, மக்களோடு மக்களாக பகிர்ந்து வாழ்ந்தனர். அதனால்தான், அவர்களால் மக்களுக்கு தூய ஆட்சியை தர முடிந்தது. எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி, தங்கள் சேவையை செய்தனர். அதனால், இன்று வரை மக்கள் மனதில் நிரந்தர இடம் பெற்று வாழ்ந்து வருகின்றனர்."தூய ஆட்சி, எளிமை யுள்ள தலைவரை முதல்வராகக் கொண்ட ஆட்சி தேவை' என, ஆதங்கப்படுகிறார் சிதம்பரம். ஆனால் அவர், காமராஜரை போன்று சாமானியன் அல்லவே; கோடீஸ்வரர் தானே. அவர் ஆதங்கம் உண்மையாக இருப்பின், கோடீஸ்வரரான அவர், சாமானியர் ஆக வேண்டும் என்று சொல்லவில்லை; ஆனால், "போதும்... இனி நான் மத்திய அமைச்சராக இருக்க விரும்பவில்லை' என்று கூறி, இளைய சமுதாயத்திற்கு வழி விடும் செயலை செய்து, முன் உதாரணமாக காட்சி தரலாமே!அவருக்கும் எதிர்பார்ப்புகளும், தேவைகளும் இல்லை என்று சொல்ல முடியுமா? தனக்கு ஒரு நியாயம், பிறருக்கு ஒரு நியாயம் என்ற அடிப்படையில் தானே, நாம் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

சிறையில் நிலைமைமாற வேண்டும்:


சிறையில் நிலைமைமாற வேண்டும்: வே.முருகேசன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: நம் நாட்டில், சாதாரண மனிதன் திருடினால், சிறையில் அடைத்து, வெளுத்து வாங்குவர். லஞ்சம் வாங்கி மாட்டிக்கொண்டால், தலையில் முக்காடு போட்டு, முகம் தெரியாமல் அவர்களை அழைத்துச் செல்வர். ஆனால், பெரும்புள்ளிகளோ, "நான் நிரபராதி என நிரூபிப்பேன்' என்று கூறி, பல வருடங்களாக காலத்தை தள்ளிக் கொண்டிருப்பர்.அது மட்டுமா... ஊழல் முறைகேட்டில் ஈடுபடும் பெரும் புள்ளிகளுக்கு, சிறையிலும் முதல் வகுப்பு. எப்படி திருந்துவர்? இவர்களையும் சாதாரண கைதிகளைப் போல நடத்தினால் என்ன?வி.வி.ஐ.பி.,க்கள் என்றால், சொல்லவே வேண்டியதில்லை; நம் நாட்டின் இதுபோன்ற நிலைமை வேண்டும்.




இவர்ஒருவரேபோதும்!திருமலைராஜன், ராஜகீழ்பாக்கம், சென்னையிலிருந்து எழுதுகிறார்: ஸ்பெக்ட்ரம் ஊழலிலிருந்து ராஜாவை காப்பாற்ற, தி.மு.க.,வை விட, பிரணாப் முகர்ஜி ரொம்பவும் பிரயத்தனப்படுவது, கேள்விக்குரியாக உள்ளது. இப்படிப்பட்ட குணாதிசயம் கொண்டவரை நிதியமைச்சராகப் பெற்றிருப்பது, "நம் பாக்கியமே!'"பா.ஜ., 2004ல் காட்டிய வழிகாட்டுதல்படி தான் ராஜா செயல்பட்டிருக்கிறார். 1998ம் ஆண்டிலேயே, 1.45 லட்சம் கோடி ரூபாய் பா.ஜ.,வால் நஷ்டம் ஏற்பட்டது' என்று அவர் கூறியிருக்கிறார்.இவருடைய பேச்சு, வெறும் வாதத்திற்கு வைப்பது போல் இருக்கிறதே தவிர, செறிவுடையதாக இல்லை.பிரணாப் இப்படியே பேசிக் கொண்டிருந்தால், இவர் ஒருவரே போதும், காங்கிரஸ் - தி.மு.க., கூட்டணியை தோல்வி காணச் செய்ய. ஒருவர் தட்டிக்கொடுக்க, மற்றவர் அணைத்துச் செல்ல... ராஜா, ராஜா தான்!

மன்னிக்கமாட்டார்கள்மக்கள்!க.அருச்சுனன், செங்கல்பட்டிலிருந்து எழுதுகிறார்: "ஸ்பெக்ட்ரம் முறைகேடு குறித்து விசாரிக்க, பார்லிமென்ட் கூட்டுக்குழு அமைக்கக் கோரிய எதிர்க்கட்சிகளின் பார்லிமென்ட் முடக்க செயல்களை, மக்கள் மன்னிக்க மாட்டார்கள்' என்கிறார், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி.எப்போதுமே, ஆளும்கட்சி, தனக்கு சாதகமாகத்தான் பேசும்; அதன் செயலும் அப்படியே இருக்கும்.எதிர்க்கட்சிகள் தான், ஆளும்கட்சியின் தவறை தட்டிக் கேட்கும். அப்படி செயல் ஆற்றுகின்றனரா என, மக்கள் உன்னிப்பாக கவனிக்கின்றனர். பார்லிமென்ட் முடக்கத்தால், மக்கள் வரிப் பணம் வீண் போனாலும் பரவாயில்லை; 1.76 லட்சம் கோடி பணம் அரசுக்கு வந்தால் நல்லது என, மக்கள் கருதுகின்றனர்.தவறுகளை சுட்டிக்காட்டுபவர்களுக்குத் தான், கூட்டம் கூடும். எனவே, எதிர்க்கட்சிகளின் செயலை மக்கள் ஆதரிக்கின்றனர்.ஊழல் முறைகேட்டை வெளிப்படுத்த, தெளிவுபடுத்த கோரும் எதிர்க்கட்சிகளை, மக்கள் வெறுக்க மாட்டார்கள். மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டியது எந்தக் கட்சி என்பதை, மக்கள் மன்றம் முடிவு செய்யும்.
ஊழல் செய்தவர்களை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்பதை, அரசியல்வாதிகள் உணர வேண்டும்.

தமாஷ்சீன்போடுங்களேன்!

தமாஷ்சீன்போடுங்களேன்!க.மோகன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: தமிழக முதல்வர், தன் தள்ளாத வயதில் கூட, மூளையை கசக்கி யோசித்து, மக்களை மயக்கும் போதை திட்டங்களை, இலவசங்களை வழங்கி, மக்களையும், கட்சியையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். மக்களின் அத்தியாவசிய தேவையாகி போன, "டிவி'யை இலவசமாக கொடுத்து, அதையே தனக்கு கேன்வாஸ் செய்ய, இலவச விளம்பரமாக்கினார்.மக்களிடம், ஐந்து வருட காலம் அந்த போதை இருந்ததென்னவோ உண்மை தான். ஆனால், அந்த ஐந்து வருட முயற்சியையும் முறியடித்து, போதையை தெளிய வைத்துள்ளது, "2ஜி' ஸ்பெக்ட்ரம். குப்பனுக்கும், சுப்பனுக்கும், "2ஜி' ஸ்பெக்ட்ரம் பற்றி என்ன தெரியும் என்றெல்லாம் நினைக்க முடியாதபடி, இலவச "டிவி' மூலம், இந்த ஊழல் விஷயம், காட்டு தீ போல பரவியுள்ளது. ஊழல் நடந்தது, ஊருக்கே தெரிந்த நிலையில், பதவியில் இருக்கும் போதே, நான்கு முதல், ஐந்து மாதத்திற்குள், ஊழலே நடக்கவில்லை என நிரூபிப்பது இயலாத காரியம்.அது முடியாமல் போகும்போது, அதை திசை திருப்ப, அவசர கால நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் தி.மு.க.,வுக்கு உள்ளது. ஒரு சில திரைப்படத்தில், கிளைமாக்ஸ் மட்டும் செம காமெடியாகவோ, செம டிராஜடியாகவோ இருக்கும். தி.மு.க., தலைவரும், மற்ற அமைச்சர்களும், அடுத்து வரும் நாட்களில், அந்த கிளைமாக்சை அடுத்தடுத்து விடும் அறிக்கைகளிலும், சால்ஜாப்புகளிலும் இருந்து மாறி, ஒரு காமெடி சீனை அரங்கேற்றினால், சிரிக்கும் வாய்ப்பாவது மக்களுக்கு கிடைக்கும்.

முதல்வருக்கு தெரியலையே!

முதல்வருக்கு தெரியலையே!அ.ஜெயராமன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: "இலவசங்கள்' மூலம் எந்தத் தேர்தலிலும் சுலபமாக வெற்றி பெற்று விடலாம் என்று தி.மு.க., எண்ணிக் கொண்டிருப்பதை, தமிழக மக்கள் அனைவருமே அறிவர்.இது குறித்து, வெளியாகி உள்ள ஒரு செய்திக்கு மறுப்பு தெரிவிக்கும் நோக்கோடு, "பத்திரிகையோடு, இலவச இணைப்பை வழக்கமாக வழங்கும் நாளிதழுக்கு, அரசு வழங்கும் இலவச திட்டங்களை விமர்சிக்க அருகதை உண்டா?' என, வினா எழுப்பியுள்ளார் முதல்வர் கருணாநிதி.எதிர்க்கட்சிகள் எழுப்பும் எந்தவொரு விமர்சனத்திற்கும், புள்ளி விவரங்களோடும், மற்ற மாநிலங்களை ஒப்பீடு செய்தும், மறுப்புத் தெரிவிக்கும் கருணாநிதி, "தினமலர்' விஷயத்தில், தடுமாறி இருப்பது எனக்கு ஆச்சர்யமாக உள்ளது."தினமலர்' நாளிதழுடன் வெள்ளிக்கிழமைகளில் வழங்கப்படும், "சிறுவர் மலர்' சனிக்கிழமைகளில் அளிக்கப்படும், "ஆன்மிகமலர்' ஞாயிற்றுக் கிழமைகளில் தரப்படும், "வாரமலர்' திங்கள் கிழமைகளில் கொடுக்கப்படும், "கம்ப்யூட்டர் மலர்' ஆகிய எதுவுமே, இலவசம் அல்ல.செவ்வாய், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில், "தினமலர்' நாளிதழின் விலை மூன்று ரூபாய். வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில், "தினமலர்' நாளிதழின் விலை நான்கு ரூபாய்.ஆக, சிறுவர் மலரோ, ஆன்மிக மலரோ, வாரமலரோ, கம்ப்யூட்டர் மலரோ, "இலவசங்கள்' அல்ல; அவைகளுக்கு விலை உண்டு.மேலும் அவைகள், "தினமலர்' நாளிதழுடன், "இணைப்பு' என்றுதான் குறிப்பிடப்படுகின்றனவே தவிர, "இலவச இணைப்பு' என்று, எங்கும், எப்போதும் குறிப்பிடப்படுவதில்லை. இது, "தினமலர்' வாசகர் அனைவருக்குமே நன்கு தெரியும்.வேறு சில பத்திரிகைகள் தான், இணைப்புகளுக்காக, கூடுதலாக காசையும் வாங்கி, "இலவச இணைப்பு' என்று விளம்பரப் படுத்துகின்றன. "தினமலர்' நாளிதழ் வழங்கும் அனைத்தும், இணைப்புகள்தானே தவிர, இலவசம் கிடையாது. எதையுமே கூர்ந்து கவனிக்கும் முதல்வர் கருணாநிதி, இலவசத்தில் இப்படி கோட்டை விட்டது, ஆச்சர்யமாக உள்ளது.

க்கள் பணமும்குலநாசம்!

மக்கள் பணமும்குலநாசம்!என்.சிவசுந்தரபாரதி, காரைக்குடியிலிருந்து எழுதுகிறார்: தணிக்கைத் துறை அதிகாரியிடம் எம்.பி.,க்கள் கேள்வியும், ஆய்வும் எதற்கு? கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு? இந்த இமாலயத் திருட்டு பற்றியும், பங்குதாரர்கள் யார் யார் என்பதும், இந்தியாவுக்கே தெரியும்போது, அப்பாவி கணக்குத் தணிக்கை அதிகாரியை குத்திக் கொல்வதால் என்ன பயன்?உச்சியே சரியில்லை, உள்ளங்கால் வி.ஏ.ஓ.,வை சித்ரவதை செய்து என்ன பயன்? ஜனாதிபதி, உண்மையிலேயே வாய்மை, தூய்மை, நேர்மை உள்ளவர் என்றால், பிரதமரை அழைத்து, ஜே.பி.சி.,க்கு அனுமதி தரச் சொல்லியிருப்பார். அவர் தன், அமைதி மூலம், நன்றிக் கடனைச் செலுத்துகிறார்.காங்கிரசின் உத்தரவுப்படித் தான், தேர்தல் கமிஷன், சி.பி.ஐ., சபாநாயகர் போன்றோர் நடப்பது தெளிவாகவே தெரிகிறது. பலமுறை, சுப்ரீம் கோர்ட்டால், சி.பி.ஐ., அவமானப்படுத்தப்பட்டும், அது திருந்தவில்லை. நிரா ராடியாவின் கமிஷனே, 60 கோடி ரூபாய் எனில், பங்குதாரர்களின் கொள்ளை எவ்வளவு?"<span st

எதிர்க்கட்சிகளுக்குஅழகு எது?

எதிர்க்கட்சிகளுக்குஅழகு எது?ஜூலி வில்சன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: "தேசத்தின் மண்வாசனை தெரியாதவர் ராகுல்' என்ற இல.கணேசனின் பேட்டியை படித்தேன்... "சிறப்பாக' உள்ளது.அன்னிய நாட்டில் பிறப்பைப் பெற்ற அத்வானி எல்லாம், என்னமாய் தேசப்பற்றுக் கொண்டிருக்கிறார்; இந்திய மண்ணில், அயோத்தியில், பாபர் மசூதி இடித்து புண்ணியம் தேடிக் கொண்டவர்கள் தான், "தேசம், மண் வாசனை' என்று பேசுகின்றனர்.என்னமோ இவர்களின் ஆட்சியில் ஊழலே இல்லாதது போல், இப்படியொரு நாடகம். எல்லாம் தேர்தலை முன் வைத்து தான் நடக்கிறது.போராட்டம், உண்ணாவிரதம் என்பதால், எல்லா விதத்திலும் இந்த தேசத்தின் மண்ணிற்கு எத்தனை நஷ்டம், பொது சொத்து நாசம் என்பதெல்லாம் இந்த கட்சித் தலைவர்களுக்கு என்று தான் உறைக்கப் போகிறதோ?முதலில் ஒரு விரலை சுட்டிக்காட்டும் போது, மற்ற நான்கு விரல்கள் தங்களை நோக்கி உள்ளது என்பதை உணரத்தான் வேண்டும்.நாட்டிற்கு பங்கம் வராமல், மத்திய அரசோடு ஒன்றிணைந்து, ஊழலை ஒழிக்க பாடுபடுவதே எதிர்க்கட்சிகளுக்கு அழகு.

ஊடகங்களுக்கு வேண்டுகோள்... :

ஊடகங்களுக்கு வேண்டுகோள்... : மு.அமானுல்லா, துபாயிலிருந்து அனுப்பிய, "இ-மெயில்' கடிதம்: ஒரு சராசரி குடிமகன், மற்றொருவருடைய பொருளை, அவருக்கு தெரியாமல் அபகரித்தால், அதை திருட்டு என்கிறோம். ஒருவரிடம் பணமோ, பொருளோ வாங்கி ஏமாற்றினால், மோசடி என்கிறோம். இவை இரண்டும், சிறிய அளவில் நடப்பவை.ஆனால், மக்கள் வரிப்பணம் கோடிக்கணக்கில், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளால் அபகரிக்கப்படும் போதும், நாட்டின் இயற்கை வளம் சுரண்டப்படும் போதும், நாட்டின் வருமானத்தை இழக்க செய்யும் நடவடிக்கைகளையும் நாம், "ஊழல்' என்கிறோம்.பெரிய இடங்களில் நடக்கும் திருட்டுக்களை நாம் ஊழல் என குறிப்பிடுவதால், இன்றைய அனேக மக்களிடம், குறிப்பாக இளைய சமுதாயத்தினரிடமும், "ஊழல்' என்ற சொல், ஒரு கவுரவ சொல்லாக அமைந்து விட்டது.ஏனென்றால், ஒவ்வொரு ஊழல் பிரச்னைகள் எழும்போதும், ஒரு சில நாட்கள் மட்டுமே பேசிவிட்டு, பிறகு நாம் மறந்து விடுவது, இக்காரணத்தால் கூட இருக்கலாம்.எனவே, ஊழல் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் அதிகப்படுத்த, வரும் காலங்களில், வீடு கட்டியதில் ஐந்து கோடி ரூபாய் அரசு பணம் திருடப்பட்டது, பாலம் கட்டியதில் 50 கோடி மக்கள் வரிப்பணம் கொள்ளை அடிக்கப்பட்டது என, ஊடகங்கள் செய்தி வெளியிட வேண்டும்.

முன் உதாரணமாக திகழ வேண்டாமா?

முன் உதாரணமாக திகழ வேண்டாமா?ஜே.ராஜகுமார், திருப்பூரிலிருந்து எழுதுகிறார்: பொது வாழ்வில் ஈடுபட்ட அன்றைய தலைவர்கள் காமராஜர், கக்கன் ஆகியோரை நினைத்து பார்க்கும்போது, இன்றைய பொது வாழ்வில் ஈடுபட்டிருக்கும் அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள், தங்கள் தகுதிக்கு மேல், மிகுந்த எதிர்பார்ப்புகளை கொண்டிருக்கின்றனர். அன்றைய அரசியல் தலைவர்கள், தங்களின் வாழ்க்கையை, மக்களோடு மக்களாக பகிர்ந்து வாழ்ந்தனர். அதனால்தான், அவர்களால் மக்களுக்கு தூய ஆட்சியை தர முடிந்தது. எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி, தங்கள் சேவையை செய்தனர். அதனால், இன்று வரை மக்கள் மனதில் நிரந்தர இடம் பெற்று வாழ்ந்து வருகின்றனர்."தூய ஆட்சி, எளிமை யுள்ள தலைவரை முதல்வராகக் கொண்ட ஆட்சி தேவை' என, ஆதங்கப்படுகிறார் சிதம்பரம். ஆனால் அவர், காமராஜரை போன்று சாமானியன் அல்லவே; கோடீஸ்வரர் தானே. அவர் ஆதங்கம் உண்மையாக இருப்பின், கோடீஸ்வரரான அவர், சாமானியர் ஆக வேண்டும் என்று சொல்லவில்லை; ஆனால், "போதும்... இனி நான் மத்திய அமைச்சராக இருக்க விரும்பவில்லை' என்று கூறி, இளைய சமுதாயத்திற்கு வழி விடும் செயலை செய்து, முன் உதாரணமாக காட்சி தரலாமே!அவருக்கும் எதிர்பார்ப்புகளும், தேவைகளும் இல்லை என்று சொல்ல முடியுமா? தனக்கு ஒரு நியாயம், பிறருக்கு ஒரு நியாயம் என்ற அடிப்படையில் தானே, நாம் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

என்னே அக்கறை!

என்னே அக்கறை!எம்.சோமு, விழுப்புரத்திலிருந்து எழுதுகிறார்: "2ஜி' விவகாரத்தில், பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட மறுக்கும் மத்திய அரசின் சார்பில், நிதி அமைச்சர், புத்தம் புது குண்டு ஒன்றை கொளுத்திப் போட்டிருக்கிறார்."கடந்த 1998ல், தே.ஜ., கூட்டணி ஆட்சி காலத்தில் பின்பற்றப்பட்ட கொள்கைகளால், அரசுக்கு 1.45 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதைப்பற்றி எதிர்க்கட்சிகள் வாய் திறக்காதது ஏன்?' என்று வினா எழுப்பியுள்ளார்.காங்கிரஸ் ஆட்சியில் அமர்ந்து எட்டு முழு ஆண்டுகள் முடியப் போகிறதே... இத்தனை ஆண்டுகளாக எங்கே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்? அப்போதே ஒரு கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட்டிருக்க வேண்டியது தானே? பிரணாப் கூறுவது போல், 1.45 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருந்து, காங்கிரஸ் இவ்வளவு காலம் அமைதியாக இருந்திருக்கிறதென்றால், இந்த நாட்டின் மீதும், அதன் சொத்தின் மீதும், அது எவ்வளவு அலட்சியமாக இருந்து வந்திருக்கிறது என்பது தெரிகிறது.அது சரி... காங்கிரசுக்கு நாட்டின் மீது அக்கறை இருக்குமாயின், வெளிநாடுகளில் முடங்கிக் கிடக்கும் 70 லட்சம் கோடி கறுப்புப் பணத்தை, சும்மா பார்த்துக் கொண்டிருக்குமா? அதைப் பற்றி யாராவது பேசினாலேயே, அரசுக்குப் பற்றிக்கொண்டு வருகிறதே!அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில், காங்கிரஸ் கட்சியும், அதன் பிரதிநிதிகளும் கூறும் எந்தவொரு சமாளிப்பையும், எதிர் குற்றச்சாட்டுகளையும், மக்கள் நம்பத் தயாராக இல்லை. 1.76 லட்சம் கோடி ரூபாய் ஸ்பெக்ட்ரம் ஊழல், மக்கள் ஒவ்வொருவர் மனதிலும், பசுமரத்தாணி போல பதிந்து விட்டது. அதன் விளைவை, எதிர்வரும் தேர்தல்களில் காங்கிரஸ் சந்தித்து, அதற்குரிய விலையைக் கொடுத்தே ஆக வேண்டும்.